நீல் ஆம்ஸ்டிராங் அடுத்து உலக புகழ் பெற்ற இன்னொரு பெயர் லான்ஸ் ஆம்ஸ்டிராங். உலகின் கடுமையான சைக்கிள் பந்தயத்தில் ஏழு முறை வென்ற ஒரே மனிதன். டூர் டி பிரான்ஸ் 3 வாரத்தில் 3200 கிலோமீட்டர் ஓட்டும் பந்தயம்.கேன்சர் நோயால் சில மாதங்களில் இறந்துவிடுவார் என டாக்டர்கள் கூறிய பிறகு அந்த நோயுடன் போராடி ஜெயித்து மீண்டும் சைக்கிள் ஓட்டி வெற்றிக்கொடி நாட்டியதை அதிசயமாக பார்த்தது உலகம். கிரிக்கெட் வீரர் யுவராஜ் அவரால் ஊக்கம் பெற்றவர். கேன்சர் நோயாளிகளுக்கு உதவ அறக்கட்டளை நிறுவி 50 கோடி டாலர் திரட்டியுள்ளார். இந்த நிலையில்தான் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அது நடத்திய விசாரணையில் பங்கேற்று தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று லான்ஸ் கூறிவிட்டதால் ஒரு தரப்பான முடிவை அந்த அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி லான்ஸ் இதுவரை வென்ற அனைத்து பதக்கங்களும் அவரிடம் இருந்து பறிக்கப்படும்; இனி அவர் ஆயுளுக்கும் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்கக்கூடாது. விசாரணைக்கு வர மறுப்பது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமம் என அமெரிக்க அமைப்பு கூறுகிறது.
இத்தனை ஆண்டுகளில் 500 முறைக்கு மேல் பரிசோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட எந்த மருந்தையும் நான் பயன்படுத்தவில்லை என்று ரிசல்ட் வந்த பிறகும் எப்படியாவது என் பதக்கங்களை பறிக்கும் முயற்சியை 17 ஆண்டுகளாக தொடர்கிறார்கள் சிலர் என்று குமுறுகிறார் லான்ஸ்.செய்யாத குற்றத்துக்காக தொடர்ந்து அடிவாங்கும் அப்பாவி ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் 'ஆமாம், நான் குற்றவாளிதான்' என்று ஒப்புக் கொள்ளும் மன நிலைக்கு வருவதை நினைவுபடுத்துகிறது. அதையே லான்ஸ் வேறு மாதிரி சொல்கிறார்: 'போதும்டா சாமி என்று சொல்லி மொத்தத்தையும் விட்டு விலகும் கட்டம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும். எனக்கு இப்போது வந்திருக்கிறது'. எத்தனை பெரிய சாதனையாளனாக இருந்தாலும் அதிகார கட்டமைப்புடன் மோதி ஜெயிக்க முடியாது என்பதற்கு இங்கேயும் பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம்.
இத்தனை ஆண்டுகளில் 500 முறைக்கு மேல் பரிசோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட எந்த மருந்தையும் நான் பயன்படுத்தவில்லை என்று ரிசல்ட் வந்த பிறகும் எப்படியாவது என் பதக்கங்களை பறிக்கும் முயற்சியை 17 ஆண்டுகளாக தொடர்கிறார்கள் சிலர் என்று குமுறுகிறார் லான்ஸ்.செய்யாத குற்றத்துக்காக தொடர்ந்து அடிவாங்கும் அப்பாவி ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் 'ஆமாம், நான் குற்றவாளிதான்' என்று ஒப்புக் கொள்ளும் மன நிலைக்கு வருவதை நினைவுபடுத்துகிறது. அதையே லான்ஸ் வேறு மாதிரி சொல்கிறார்: 'போதும்டா சாமி என்று சொல்லி மொத்தத்தையும் விட்டு விலகும் கட்டம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும். எனக்கு இப்போது வந்திருக்கிறது'. எத்தனை பெரிய சாதனையாளனாக இருந்தாலும் அதிகார கட்டமைப்புடன் மோதி ஜெயிக்க முடியாது என்பதற்கு இங்கேயும் பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment