Monday, 2 July 2012

இலவசமாக மருந்து, மாத்திரை வழங்கும் திட்டம்


மருந்து, மாத்திரை விலை கடந்த 10 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சில மருந்துகளின் விலை 137 சதவீதம் உயர்ந்துள்ளதாம். ஏழைகள் மட்டுமல்ல பணக்காரர்களால் கூட வாங்க முடியாத அளவுக்கு விலை உள்ளது. இதை சமாளிக்க அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக மருந்து, மாத்திரை வழங்கும் திட்டம் அக்டோபரில் அறிமுகமாகிறது.ஆஸ்பத்திரி செலவில் முக்கால்வாசி கையில் இருந்துதான் செலவாகிறது. இதில் மருந்து  செலவு மட்டுமே 72 சதவீதம். இந்த செலவுக்கு பயந்து கொண்டே பலர் மருத்துவமனை பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை.  கிராமங்களில் 30 சதவீதம் பேரும் நகரங்களில் 20 சதவீதம் பேரும் இப்படித்தானாம். அப்படியே தப்பித் தவறி போய் விட்டால் கடனாளியாகத்தான் வீடு திரும்ப வேண்டும். அந்த அளவுக்கு காஸ்ட்லி ஆகி விட்டது சிகிச்சை. ஆண்டுக்கு 3 கோடிப் பேர் சேமிப்பை இழந்து, கடனாளியாகி வறுமையில் தள்ளப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புதிது புதிதாக வரும் நோய்களுக்கு செலவழித்தே பலர் ஏழைகளாகி வருகிறார்கள். இதை மனதில் கொண்டே நோயாளிகள் அனைவருக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கப் போகிறது அரசு.அடுத்த நிதியாண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. 5 ஆண்டுகளுக்கு ரூ.28 ஆயிரத்து 560 கோடி செலவாகுமாம். தற்போது அரசு மருத்துவமனைகள் மூலம் மொத்த மக்கள்தொகையில் 22 சதவீதம் பேர் பலன் பெற்று வருகிறார்கள். மருந்து இலவசமானால் இது 52 சதவீதமாக உயரும். மொத்தம் 348 வகையான, அதிக விலை கொண்ட முக்கிய மருந்து வகைகள் இலவசமாக கிடைக்கும். இந்த மாத்திரைகள் 640 மாவட்ட மருத்துவமனைகள், 5,000 கம்யூனிட்டி ஹெல்த் சென்டர், 23 ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்கள், 1.60 லட்சம¢ துணை சுகாதார மையங்கள் மூலம் நோயாளிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட், ஸ்கேன், இசிஜி என ஏகப்பட்ட மருத்துவ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மேலும் டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரைகளுக்கான செலவும் அதிகமாக இருக்கும். இதனாலேயே பாதிப் பேர் மெடிக்கல் ஷாப்பிலேயே மாத்திரை வாங்கி சாப்பிட்டு குணமாகிக் கொள்கிறார்கள். இனி இது மாறும்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment