கொலை, கொள்ளை வழக்குகளுக்கும் குடும்ப கோர்ட் வழக்குகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என வாதாடுவார்கள். பின்னதில், யாருக்கும பாதிப்பு இல்லாமல், சமாதானமாக போக வேண்டும் என வாதாடுவார்கள். நீதிபதிகளுக்கும் அங்கு வேறு விதமான சூழல்தான். கர்நாடகா உயர் நீதிமன்றத் தில் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி, ஒரு நீதிபதியின் வழக்குகள் அனைத்தையும் வேறு நீதிபதிக்கு மாற்றியுள்ளது நீதிமன்றம்.
முதல் வழக்கு: கணவன், மனைவி இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். ஒரு குழந்தை இருக்கிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு. பிரிந்து விடலாம் என முடிவு செய்து கோர்ட் படியேறி விட்டார்கள். அந்த வழக்கை விசாரித்திருக்கிறார் நீதிபதி பக்தவத்சலா. கணவன் குழந்தையையும் மனைவியையும் நன்றாகவே பார்த்துக் கொள்வது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்து, விவாகரத்து கேட்டிருக்கிறார் மனைவி. உன்னையும் குழந்தையையும் கணவன்தான் நன்றாக பார்த்துக் கொள்கிறாரே… ஏன் உன்னை அடித்ததையே பேசிக் கொண்டிருக்கிறாய்… சேர்ந்து வாழ வழியைப் பார் என நீதிபதி சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இரண்டாவது வழக்கு: ஒரு விவாகரத்து வழக்கில் இளம் பெண் வக்கீல் ஒருவர் வாதாடியிருக்கிறார். திருமணம் ஆகாத உனக்கு குடும¢பத்தை பற்றி என்ன தெரியும்? இந்த வழக்கில் வாதாட உனக்கு தகுதி இல்லை என பக்தவத்சலா சொன்னதாகவும் செய்தி வெளியானது. அவ்வளவுதான் பெண்கள் அமைப்புகள் கொந்தளித்து விட்டன.
மனைவியை அடிப்பதை யாராவது நியாயப்படுத்துவார்களா? ஒரு குடும்பம் பிரிந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில், பழசெல்லாம் மறந்து சேர்ந்து வாழ வேண்டும் என்று சொன்னேன். அதைத்தான் பத்திரிகைகள் வேறு மாதிரி புரிந்து கொண்டன என்கிறார் நீதிபதி பக்தவத்சலா. குடும்ப நீதிமன்றங்களில் சட்டப்படி மட்டுமே வழக்கை பார்க்காமல், நியாயமாகவும் ஆராய்ந்து அறிவுரை சொல்வார்கள். ஊர் பெரியவர் அந்தஸ்தில் தீர்ப்பு அளிப்பார்கள். அதனால் தீர்ப்புகளில் நியாயம் இருக்கும். எந்த தரப்பும் பாதிக்கக் கூடாது என்ற அக்கறை இருக்கும். அது சில நேரங்களில் தப்பாக தெரியும். இந்த விவகாரத்திலும் அப்படித்தான் ஆகியிருப்பதாக தெரிகிறது.
மனைவியை அடிப்பதை யாராவது நியாயப்படுத்துவார்களா? ஒரு குடும்பம் பிரிந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில், பழசெல்லாம் மறந்து சேர்ந்து வாழ வேண்டும் என்று சொன்னேன். அதைத்தான் பத்திரிகைகள் வேறு மாதிரி புரிந்து கொண்டன என்கிறார் நீதிபதி பக்தவத்சலா. குடும்ப நீதிமன்றங்களில் சட்டப்படி மட்டுமே வழக்கை பார்க்காமல், நியாயமாகவும் ஆராய்ந்து அறிவுரை சொல்வார்கள். ஊர் பெரியவர் அந்தஸ்தில் தீர்ப்பு அளிப்பார்கள். அதனால் தீர்ப்புகளில் நியாயம் இருக்கும். எந்த தரப்பும் பாதிக்கக் கூடாது என்ற அக்கறை இருக்கும். அது சில நேரங்களில் தப்பாக தெரியும். இந்த விவகாரத்திலும் அப்படித்தான் ஆகியிருப்பதாக தெரிகிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment