படித்ததைப் பகிர்வோம். சிந்திப்பதை எழுதுவோம். உண்மையை உரக்கச் சொல்வோம். மனிதநேயம் வளர்ப்போம்
Saturday, 22 September 2012
வரவிருக்கும் அறிவிப்புகள் ஐமுகூ அரசை கரை சேர்த்து விடுமா?
Friday, 21 September 2012
Thursday, 20 September 2012
மம்தா பானர்ஜி எடுத்த முடிவு
Tuesday, 18 September 2012
ஆள் இல்லாத தீவு யாருக்கு சொந்தம்
நன்றி: Dinakaran
மக்கள் காதில் பூ
மூலப்பொருள் விலை உயரும்போது அதை பயன்படுத்தி உற்பத்தியிலோ சேவையிலோ ஈடுபடுபவர்கள் அதற்கான விலை அல்லது கட்டணத்தை உயர்த்துவது தப்பில்லை. ஆனால் அந்த உயர்வில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். பெட்ரோலைவிட டீசல் விலை குறைவு. ஆனாலும் டீசலில் இயங்கும் ஆட்டோக்கள் பெட்ரோல் ஆட்டோவுக்கு நிகரான கட்டணமே வசூலிக்கின்றன. சொல்லப்போனால் பயணிகளுக்கு இரண்டு வகை ஆட்டோக்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. பெட்ரோல் விலை உயரும்போது டீசல் ஆட்டோவுக்கும் சேர்த்து கட்டணம் உயர்த்துகின்றனர். இப்போது அதே போல டீசல் விலையை காரணம் காட்டி பெட்ரோல் ஆட்டோக்களும் கட்டணத்தை உயர்த்தி விட்டன. ஆம்னி பஸ் சங்கம் கூறும் கணக்குப்படி, டீசல் விலை உயர்வால் ஒரு பஸ்ஸுக்கு ரூ. 900 கூடுதலாக செலவாகும். ஆனால் கட்டண உயர்வால் 1200 ரூபாயாவது கூடுதலாக கிடைக்கும். ஆக, மத்திய அரசால் இவர்களுக்கு குறைந்தபட்சம் 300 தினசரி கூடுதல் லாபம். விலை, வரி, கட்டணம் எது உயர்ந்தாலும் அந்த சுமையை மக்கள் தலையில் ஏற்றிவைப்பது வாடிக்கையாகி விட்டது. அதன் பிறகு அப்பாவிகள் போல டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் அறிவித்து மக்கள் காதில் பூ சுற்றுவது நல்ல வேடிக்கை.
நன்றி: Dinakaran
மனநலம் பாதித்தவர்களின் மனித உரிமைகள்
நன்றி: Dinakaran
Monday, 17 September 2012
சிங்கம் களம் இறங்கிடுச்சி...
பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. எந்த முடிவும் எடுக்க முடியாத பலவீனமான பிரதமர் என்று ஊடகங்கள் கோரஸ் பாடுகின்றன. அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியது. இதே நிலை தொடர்ந்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு மங்கும்; அதனால் முதலீடுகள் பின்வாங்கலாம் என்று முன்னணி தொழில் நிறுவனங்கள் கவலைப்பட்டன. 'பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். போராடி தோற்றோம் என்ற பெருமையாவது மிஞ்சட்டும்' என்று காங்கிரஸ் மேலிடம் கருதியிருக்கலாம். விளைவாக பிரதமருக்கு வேகத்தடை விலக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தம் மட்டுமே வளர்ச்சிக்கு வழி என்ற நம்பிக்கை இம்மியும் குறையாத மன்மோகன் சிங்கத்தின் பின்னால் காங்கிரஸ் அணி திரண்டிருக்கிறது.எதிரிகளையும் அவர்களைவிட தீவிரமாக எதிர்க்கும் நண்பர்களையும் சமாளித்து சிங் அணி வெற்றி பெறுமா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.
முன்பதிவு - போகாத ஊருக்கு வழி
அரசு விரைவு பேருந்து கழகங்கள், மாவட்ட போக்குவரத்து கழகங்கள் ஆகியவையும் சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன. ஆனால் அவை முன்கூட்டியே திட்டமிடுவது கிடையாது. பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக அறிவித்து டிக்கெட் முன்பதிவை தொடங்குகின்றனர். சிறப்பு ரயில்கள் விஷயத்தில் அந்த அளவுக்கு தாமதம் இல்லை. ஆனால் விடப்படும் ரயில்களின் எண்ணிக்கை போதுமானதாக இருப்பதில்லை. இந்த குளறுபடியால் ஆதாயம் அடைவது தனியார் ஒப்பந்த பேருந்து நிறுவனங்கள். மூன்று அல்லது நான்கு மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றன. குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காவது மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை செய்துகொடுப்பதைவிட ஒரு அரசுக்கு வேறு வேலை இருக்க முடியாது. உரிய கட்டணம் செலுத்தி எங்கும் எப்போதும் பயணம் செய்யலாம் என்ற நிலை ஏற்படாதவரை நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்பது உண்மைக்கு மாறான பிரசாரமாகவே இருக்கும்.
இதுதான் விதிமுறை
கார்ட்டூன் கருத்து சுதந்திரம் எதுவரை?
தீர்ப்புகளில் நியாயம்
மனைவியை அடிப்பதை யாராவது நியாயப்படுத்துவார்களா? ஒரு குடும்பம் பிரிந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில், பழசெல்லாம் மறந்து சேர்ந்து வாழ வேண்டும் என்று சொன்னேன். அதைத்தான் பத்திரிகைகள் வேறு மாதிரி புரிந்து கொண்டன என்கிறார் நீதிபதி பக்தவத்சலா. குடும்ப நீதிமன்றங்களில் சட்டப்படி மட்டுமே வழக்கை பார்க்காமல், நியாயமாகவும் ஆராய்ந்து அறிவுரை சொல்வார்கள். ஊர் பெரியவர் அந்தஸ்தில் தீர்ப்பு அளிப்பார்கள். அதனால் தீர்ப்புகளில் நியாயம் இருக்கும். எந்த தரப்பும் பாதிக்கக் கூடாது என்ற அக்கறை இருக்கும். அது சில நேரங்களில் தப்பாக தெரியும். இந்த விவகாரத்திலும் அப்படித்தான் ஆகியிருப்பதாக தெரிகிறது.
Sunday, 9 September 2012
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 150
நன்றி: Dinakaran
ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் எனது மவுனம் மேலானது
நன்றி: Dinakaran
Saturday, 8 September 2012
சிவகாசி பயங்கரம் - எமனுக்கு கொண்டாட்டம்
குறைந்தபட்சமாக உள்ளூர் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு தனி வார்டு ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு 5 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டது. ஆனால் தமிழக அரசு 60 லட்சம் ஒதுக்கியது. அதிலும் பணிகள் நடக்கவில்லை. பெரும் தொகை கேட்டு கட்சிக்காரர்கள் பேரம் பேசுவதால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடிப்பதாக எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டுகிறார். வறுமையை சமாளிக்க வேறு வழியின்றி ஆபத்தான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை காப்பாற்ற நேர்மையான ஓர் அதிகாரி வரும்வரையில் எமனுக்கு கொண்டாட்டம்தான்.
நன்றி: Dinakaran
பள்ளி வாகன விதிகள்
அனுமதிக்கப்பட்டதற்கு மேல் ஒரு குழந்தை கூடுதலாக இருந்தாலும் பேருந்தை இயக்கக்கூடாது. எல்லாமே பெரும் தொகை அபராதமாக விதிக்கத்தக்க குற்றங்கள். பள்ளிப் பேருந்து மீது கல் வீசினால் ஒரு வருடம் ஜெயில். உயிருக்கு உரிய மதிப்பளிக்கும் அந்த நாடுகளை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கிறது.
நன்றி: Dinakaran
இன்னுமொரு கொலை
Monday, 3 September 2012
தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் பாகிஸ்தானிலுள்ள கொற்கை (
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (
Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (
Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான ப
öறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.பொஃரு (
Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி' (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி' என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (
Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (
Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது. இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
"நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான "மெசபடோமியா' (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள "தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்' என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த "சானல் 4" என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த "லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன "சைடு ஸ்கேன் சோனார்" என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு "ஐஸ் ஏஜ்" எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில்.
"அண்டர்வேர்ல்ட்" என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய
அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002)
19.
இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. (ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (
Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)
நன்றி : கீற்று
”நாளி” காடு சிந்திய ரத்தம்
காடு… அவர்களின் தாய்மடி. பூமி…கருவறை. ஆனால், இன்று அவர்களே அங்கு அகதிகளாக மௌனம் சுமந்து இருக்கிறார்கள் என்பதை எத்தனை சுகவாசிகள் உணர்கிறோம்?
தமிழகத்தின் வடமேற்கு எல்லையில் கேரளா, கர்நாடகத்தோடு இணைந்து பிணைந்துகிடக்கும் நீலமலை எப்படி சிதைக்கப்பட்டது என்ற வரலாற்று ஆவணம்தான் 'நாளி' ஆவணப்படம். இரா.முருகவேள், 'ஒடியன்' லட்சுமணன் இணைந்து எழுதி, இயக்கி இருக்கிறார்கள்.
காடுகளில் வாழும் அத்தனை விதமான உயிரினங்களில், தானும் ஒரு உயிரினமாக வாழ்ந்துவருகிறார்கள் பழங்குடியினர். சமவெளிகளில் வாழும் நாகரிகம் (!) அடைந்ததாக நம்பும் அறிவுஜீவிகள் அவர்களை எப்படிச் சீரழித்தார்கள் என்பதை ஆவணப்படுத்துகிறது 'நாளி'. சமவெளியில் இருந்தவன் சந்தன மரத்தில் வீடுகளை இழைக்க, ஆதிவாசி, மூங்கில்களாலே தன் குடியிருப்பை அமைத்துக்கொண்டான். சமவெளியில் இருப்பவன் பொழுதுபோக்குக்காக வேட்டையாட… ஆதிவாசி தன் உணவின் அவசியம் தவிர, வேறு எதன் பொருட்டும் விலங்குகளைத் தொடவே இல்லை. 1830-களில் ஆங்கிலேயன் அழித்த சோலைக் காடுகளால், ஓடைகளில் நீர்வளம் பாதிக்கப்பட்டதாக அப்போதைய கோவை ஆட்சியர் சல்லிலன் ஆவணப்படுத்தியதை நினைக்கும்போது, அதன் பின் அழிந்த சோலைக் காடுகளும் சிதைந்த ஓடைகளும் மனதில் ரத்தம் வடியவைக்கின்றன.
பணத்துக்காக நடப்பட்ட தேக்கு மரங்கள் தன் அருகே எதையும் வளரவிடாமல், மண்ணை மணலாக மாற்றி வனங்களை அழிக்கிறது. சீனாவில் இருந்துவந்த தேயிலை தென் இந்தியா, அஸ்ஸாமில் இருந்த அடர் வனங்களை அழித்தது மட்டும் அல்லாமல் அங்கு இருந்த பழங்குடியின மக்களையும் கொத்தடிமை ஆக்கியது. காட்டில் இருந்த மனிதர்கள் சமவெளி மனிதர்களால் இப்படி சிதைக்கப்பட்ட கசப் பான வரலாற்றைத்தான் விவரிக்கிறது 'நாளி'.
வரி செலுத்தாத விவசாயிகள் மலைப் பாதைகளை அமைக்க அடிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதும் தேக்குக் காடுகளை அமைக்க ஒவ்வோர் இடமாக அழிக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட பழங்குடிகள் ஒருகட்டத்தில் தங்கள் பூர்வீக வசிப்பிடங்களையே தொலைத்ததும் திடுக்கிட வைக்கிறது.
தங்கவேட்டை என்ற பெயரில் தோண்டி அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டக் காடுகள், நீர் வளத்துக்கு எனத் தேக்கப்பட்ட அணைகளால் மூழ்கி அழிந்த காடுகள், நீர் மின் திட்டங்களுக்கு எனச் சுரங்கங்களில் புதைந்துபோன காடுகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் காடு சிந்திய ரத்தம் அடர்த்தியான கவிச்சிவாடை அடிப் பதாகத் தோன்றுகிறது.
குடியிருப்பு, சொகுசு விடுதிகளைச் சுற்றிப் போடப்படும் கம்பி வேலிகளில் காலம் கால மாகப் பயணப்பட்ட தடங்களைத் தொலைத்த யானைகள் பாதை மாறி, வேலிகள் அமைத்து பழக்கப்படாத பழங்குடியினரின் பகுதிகளுக்குள் புகுந்து, அவர்களின் விளை நிலத்தைத் துண்டாடும் அவலம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.
நாட்டில் 30 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும் என்னும் அரசியல்தனத்தில் இந்தச் சமூகத்துக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதைக் கொதிப்பாகப் பதிவு செய்கிறது 'நாளி'.
பூர்வகுடிகளை விரட்டிவிட்டுத் தேக்கு மர வீடு, காபி, தேநீர், சுற்றுலா, சொகுசுஅரசியல் எனச் சிலர் இப்போது வாழ்ந்துகொண்டு இருப் பது எல்லாம் ஒரு வாழ்க்கையா?
இந்தக் கருத்துகளை மிகுந்த மெனக்கெடலுடன் ஆவணப்படமாக்கி இருக்கும் கோவன் வெளியீட் டகத்துக்குப் பாராட்டுக்கள்!
நன்றி: ஆனந்தவிகடன் கட்டுரை
மருந்துக் கம்பெனியின் நேர்மை ?
புதிதாக மருந்து, மாத்திரை அறிமுகம் செய்வதற்கு முன்பு, முதலில் எலிகளுக்கும் பின்னர் ஏழை நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கும் கொடுத்து சோதனை செய்வார்கள் (ஆம். அவர்கள் எலிகளை விட சற்றே மேம்ப்பட்டவர்கள்). எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்த பிறகே, விற்பனைக்கு வரும். ஆனால் அதன்பிறகும் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அப்படி வரும்போது அதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். அதுதான் நேர்மை.
நன்றி: Dinakaran
சகாரா திரட்டிய நிதி
வர்த்தக உலகம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த இந்த வழக்கில் செபி சார்பில் அரசின் சீனியர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாதது ஆச்சரியம். சகாரா பிரபல சட்ட மேதைகளான சோலி சொரப்ஜி, ஃபாலி எஸ்.நாரிமன் உள்ளிட்ட படையை முன்னிறுத்தியது. மூத்த சென்னை வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் செபியின் சார்பில் ஆஜராகி மேற்படி மேதைகள் சகாராவின் நலன் காக்க முன்வைத்த புதுப்புது சட்ட விளக்கங்களை ஒவ்வொன்றாக தகர்த்தார். அதன் முடிவில் அருமையான தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் நல்ல பாதுகாப்பு கிடைக்கும். இந்திய நிதி, சட்டம் மற்றும் நீதித்துறைகளின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
Sunday, 2 September 2012
விளையாட்டுக் கல்வி
‘அவைக்கு வாருங்கள், விவாதிப்போம்’
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் நிர்வாண விளையாட்டு
மிகப்பெரிய நாளிதழான சன் அந்த தடையை கிண்டலடிக்கும் வகையில் தனது ஊழியர்கள் இருவரை அதே மாதிரி போஸ் கொடுக்க வைத்து முதல் பக்கத்தில் பிரசுரித்தது. அந்த வாலிபரின் பெயரும் ஹாரி. தலைப்பு போட கஷ்டமே இல்லை. அடுத்த நாள் அசல் அம்மண ஹாரியை முதல் பக்கம் பிரசுரித்து 'ஊடக சுதந்திரம்' ஒடுக்க முடியாதது என அறிவித்துள்ளது. இது வெறும் செய்தியாக தெரியவில்லை. டெலிபோன் ஒட்டுக்கேட்பு புகாரால் நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகையை மூட நேர்ந்து வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஊடக பேரரசன் ருபர்ட் முர்டோக் பிரிட்டிஷ் அரசுக்கு விடுத்துள்ள குறுந்தகவலாக தோன்றுகிறது.
ஆசிரியர் தேர்வு: தகுதி வேண்டாமா?
ஆசிரியர் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து விட முடியாது. அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அத்தனையும் மாணவனுக்கு புரிந்து விடாது. புரிந்த அத்தனையும் தேர்வில் எழுத முடியாது. இப்படி கற்பது குறைந்து கொண்டே வந்தால் எப்படி புத்திசாலி மாணவனை உருவாக்க முடியும். ஆசிரியர் அறிவாளியாக இருந்தால்தான், அதிக தகுதியுடன் இருந்தால்தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் நன்கு படித்து நல்ல வேலைக்கு வந்துவிட்டால் குடும்பம் முன்னேறி விடும். அதே போல் ஒரு நாட்டில் கல்வி சிறந்து விளங்கினால் அந்த நாடே முன்னேறி விடும்.
ஓர் இந்தியர்கூட 'ரத்னம்' இல்லையா?
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் X மங்களம் பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
டெல்லியில் பாரத ரத்னா விருதுப் பந்தயத்தின் இறுதி ஆட்டத்தில் இப்போது இந்த இரு பெயர்கள்தான் அடிபடுகின்றன.
பாலமுரளிகிருஷ்ணா சங்கீத வாழ்க்கையைத் தொடங்கியது தன்னுடைய ஆறாவது வயதில். காந்தக் குரல் என்பார்களே... அந்தச் சொல்லாடல் அப்படியே பொருந்தும். கேட்டவர்களை அப்படியே வாரிச் சுருட்டி அணைத்துக்கொள்ளும் குரல். தியாகராஜ சிஷ்யப் பரம்பரையில் வந்த பாரப்பள்ளி ராமகிருஷ்ணா பந்துலுவின் சிஷ்யர் பாலமுரளிகிருஷ்ணா. விஜயவாடா தியாகராஜர் ஆராதனையில் உட்கார்ந்து பாடியபோது அவருக்கு எட்டு வயது. 15 வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களும் அவருக்கு அத்துப்படி. ஒரு பாடலை மொழி புரிந்து பாடுவதற்கும் புரிந்துகொள்ளாமல் பாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. பாடலின் கண்ணைத் திறப்பது மொழிதான். அதை உணர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணா. தாய்மொழி தெலுங்கு தவிர,
தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம், பஞ்சாபி, வங்கம் என்று பல மொழிகளைக் கற்றவர். பன்முக மேதை. தேர்ந்த வாக்கேயக்காரர். ஏராளமான பாடல்களை இயற்றி, இசை கோத்து இருக்கிறார். வர்ணங்கள், கீர்த்தனைகள், ஜாவளிகள், தில்லானாக்கள் என்று 400-க்கும் மேற்பட்ட உருப்படிகளை தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளில் உருவாக்கி இருக்கிறார். வயலின், மிருதங்கம், வயோலா, கஞ்சிரா என்று பல வாத்தியக் கருவிகளை வாசிக்கத் தெரியும். கர்னாடக சங்கீதத்தை சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களில் பாலமுரளிகிருஷ்ணா முக்கியமானவர். திரைப்படத் துறையிலும் சாதித்தவர். 1987-ல் 'மாதவாச்சார்யா' படத்துக்காகச் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழில் 'திருவிளையாடல்' படத்துக்காக அவர் பாடிய 'ஒரு நாள் போதுமா...' பாடலை மறக்க முடியுமா என்ன?
உன்னதமான கர்னாடக சங்கீ தத்தை வெகுஜன மக்கள் ரசனைக்கு எடுத்துச் சென்றதிலும், வெளிநாட்டவர் மத்தியில் இந்திய இசை யைக் கொண்டுசென்றதிலும் பால முரளிகிருஷ்ணாவின் பங்களிப்பு மகத்தானது. கர்னாடக சங்கீதத்தில் யாருமே கையாளாத பல ராகங்களை அநாயாசமாக அவர் கையாள்வார். செவ்விசையில் நாட்டுப்புறப் பாடல்களைக் கலந்து கொடுப்பதில் வித்தகர். பீம்ஷென் ஜோஷி, ஹரிபிரசாத் சௌராஷியா, கிஷோரி அமோம்கர் போன்றவர்களுடன் இணைந்து அவர் நடத்திய ஜுகல்பந்திகள் ஒரு புதிய இசை அலைக்கு வித்திட்டன. ''உங்களுக்கு இணையாக என்னால் பாட முடியாது'' என்று பாலமுரளிகிருஷ்ணாவின் மேதைமைக்கு மகுடம் சூட்டினார் பீம்ஷென் ஜோஷி!
இப்போது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு 82 வயது. 25 ஆயிரம் கச்சேரிகளைத் தாண்டி அவருடைய கலைப் பயணம் தொடர்கிறது. கலையால் - இசையால் வேறுபாடுகளின் எல்லைகளைக் கடக்கச் செய்ய முடியும்; தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்பது உண்மையானால், பாலமுரளிகிருஷ்ணாவுக்கு எப்போதோ பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். வடக்கத்திய அரசியல் ஆதிக் கம் மிக்க பாரத ரத்னா விருதுப் பட்டியலில் பண்டிட் ரவிஷங்கர், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லா கான், பீம்ஷென் ஜோஷி என்று இது வரை இசை சார்ந்து இடம் பெற்றிருக்கும் கலைஞர்களில் ஒரே விதிவிலக்கு எம்.எஸ்.சுப்பு லட்சுமி. இப்படிப்பட்ட சூழலில்தான் பாலமுரளிகிருஷ்ணாவுக்கு பாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு கோதாவில் சச்சினைக் களம் இறக்கி இருக்கிறது வடக்கத்திய அரசியல்.
சச்சினை மனதில்வைத்துதான் பாரத ரத்னா விருதுக்கான தகுதி வரையறையை விளையாட்டுத் துறைச் சாதனைகளையும் உள்ளடக்கியதாக அரசு மாற்றி அமைத்தது. பாரத ரத்னா விருதுக்கு எல்லா வகையிலும் சச்சின் தகுதியானவர். அதேசமயம், அவருக்கு முன் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவருடைய துறையையே எடுத்துக்கொண்டால், சரியான உதாரணம் தயான் சந்த். ஹாக்கி ஆட்டத்தின் முடிசூடா சக்ரவர்த்தி. 1928, 1932, 1936 என்று மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்குத் தங்கம் வென்று தந்தவர். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் ஆட்டத்தைப் பார்த்த ஹிட்லர், அவருக்குக் குடியுரிமை தருவதோடு பிரிட்டிஷ் ராணுவத்தில் அவர் வகித்த மேஜர் பதவிக்கு மேலான கர்னல் பதவியை ஜெர்மனி ராணுவத்தில் தருவதாகச் சொல்லிக் கூப்பிட்டார். தயான் சந்த் மறுத்துவிட்டார். ஹாலந்தில் அவருடைய ஹாக்கி மட்டையில் பந்தை ஈர்க்கும் வஸ்து ஏதும் பதிக்கப்பட்டு இருக்கிறதா என்று உடைத்துப் பார்த்தார்கள். ஆஸ்திரியாவில் அவருக்குச் சிலையே வைத்தார்கள்... நான்கு கைகள், நான்கு ஹாக்கி மட்டைகளோடு. இன்றைய தலைமுறைக்கு தயான் சந்த் யார் என்று தெரியாது. மறந்துவிட்டோம்!
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிப்புகள் பல முறை கேலிக்கு உள்ளாகி இருக்கின்றன. 1988-ல் எம்.ஜி.ஆர். இடம்பெற்று இரு ஆண்டுகள் கழித்துதான் பாரத ரத்னா விருதுப் பட்டியலில் அம்பேத்கர் இடம்பெற்றார். 1991-ல் ராஜீவ் காந்திக்கு பாரத ரத்னா அறிவித்தபோதுதான், அந்தப் பட்டியலில் வல்லபாய் படேலும் மொரார்ஜி தேசாயும் இடம்பெற்றனர். நாட்டின் கல்வித் தந்தையான அபுல்கலாம் ஆசாத்துக்கு அவர் இறந்து 34 ஆண்டுகள் கழித்து 1992-லும் ஜெயபிரகாஷ் நாராயணுக்கு 1999-லும் விருதை அறிவித்தார்கள். ஆனால், இவ்வளவு போட்டி நிலவும் ஒரு விருதுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடக்காதது ஏன் என்று தெரியவில்லை. 120 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில், ஆண்டுக்கு ஒருவரைக்கூடவா நாம் கௌரவிக்க முடியாது? காலம் கழித்து அளிக்கப்படும் அங்கீகாரம் அர்த்தமற்றது மட்டும் அல்ல; அவமதிப்பும்கூட!
Saturday, 1 September 2012
ரத்தம் குடிக்கும் புத்தம்!
ரத்தம் குடிக்கும் புத்தம்! |
| பதைபதைக்கும் முஸ்லிம் படுகொலைகள்... |
புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் ரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின் பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும்.சிங்களம் இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால் மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது.
இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர்,பர்மாவில் வாழ வந்த முஸ்லிம்கள் பர்மிய ராணுவம்-புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.இரு நாட்டிலும் பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என பிரித்துக்கொண்டுள்ளது.
கடவுள் இல்லை என்ற புத்தனை கடவுளாக்கி, அதை ஓர் மதமாக்கி, அதன் பெயரில் ஏன் தான் இவ்வளவு படுகொலைகளோ ?

உலகின் கறுப்புச் சரித்திரத்தில் கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும், மதக்கோட்பாட்டால் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய படுகொலைகளின் பூர்வீகம் தான் பர்மா.
பர்மா ராணுவ ஜனநாயகவாதிகளால் ஆளப்படும் நாடு...தேசியமயமாக்கப்பட்ட நதிகள். அதனால் இயற்கையில் வறுமை என்பதே இல்லை.தொழில்நுட்பத்தில் பின்தங்கிய தேசம்.இந்தியாவை போலவே பல மொழி பேசும் இனத்தவர் உள்ள நாடு.ஆனால் அம்மக்களுக்கென சுயாட்சி இல்லை; பர்மியர்களுக்கு கீழ் நிலையில் இருக்கும் கூட்டாட்சி நிலை தான்.
சூகியே குரல் எழுப்புவதில்லை
இவர்களின் கோட்பாடும்,வேற்றுமைக்குள் ஒற்றுமை தான்.ஆனாலும் சர்வதேச அளவில் பின்னோக்கியுள்ள நாடுதான் அன்றைய பர்மாவும், இன்றைய மியான்மரும். பர்மா என்றால் நமக்கு தெரிவதெல்லாம் 'ஆங் சாங் சூகி'மட்டுமே.அந்த சூகியே மாற்று மத-இனத்தவர்களின் படுகொலைகளுக்கு பெரிதாக குரல் எழுப்புவதில்லை என்கிறபோதே சூகியின் ஜனநாயக தத்துவம் பொய்பிக்கிறது.
சூகி பர்மிய இனத்துக்கு நல்ல தலைவர்; ஆனால் பர்மியத்தின் அனைத்து இனத்தவருக்கும் நல்ல தலைவரல்ல...அப்படியிருந்தும் சூகியை நம்புகிறார்கள் வதைபடும் அம்மக்கள்.
பர்மாவின் இப்படுகொலைகளில் அதிகபடியாக சிக்குவதெல்லாம் முஸ்லிம் மதத்தவர்கள் தான்.இன்றைய காலக்கட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முஸ்லிம் மதத்தவர்களுக்கு எதிரான படுகொலைகளே பர்மாவில் விடாமல் நிகழ்ந்து கொண்டேயுள்ளன.
முகமறியா எந்தயொரு தேசத்திலோ குண்டு வெடித்தால் கூட, அது முஸ்லிம்தான் வைத்திருப்பான் என்பதே சர்வதேச கணக்கீடுகள்.அக்கணக்கீடை இவ்வுலகம் நிர்ணயித்துக் கொண்டதால், எந்தயொரு முஸ்லிம் கொல்லப்பட்டாலும் சர்வதேச சமூகம் அலட்டிக்கொள்வதில்லை.
பர்மிய சுதந்திரத்துக்கு முன்பே, இரண்டாம் உலகப்போரின் ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது பர்மிய-ஜப்பானிய ராணுவத்தால் 28 மார்ச் 1942 ம் ஆண்டு சுமார் 5,000 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

அன்றிலிருந்து தொடங்கிய வெறி இதுவரை 20,000 முஸ்லிம்களை கொன்றுள்ளது; 4,000 குடும்பங்களை அழித்தும், எரித்துமுள்ளது;300 மசூதிகளை மூடியுள்ளது;பல லட்சம் மக்களை பர்மாவை விட்டு துரத்தியடித்துள்ளது.
பர்மிய முஸ்லிம்கள் 'ரோஹிங்க்யாஸ்' என்றழைக்கப்படுகின்றனர்.ஐ.நா.வின் கணக்கெடுப்புபடி இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம்.இவர்கள் அதிகபடியாக பங்களாதேஷ்-பர்மா எல்லையோரங்களில் வாழ்கின்றனர்.பல நூறாண்டுகளாக வாழும் இந்த பர்மிய முஸ்லிம்களுக்கு பர்மாவில் குடியுரிமை கிடையாது.தங்கள் விருப்பத்திற்கு திருமணம் செய்ய அனுமதியில்லை,கல்வியும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
கொலைகார புத்த பிக்குகள்
இவர்களது குழந்தைகள் கொத்தடிமைகளை போல் சிறு ஊதியத்துக்கு குழந்தை தொழிலாளிகளாக்கப்படுகின்றனர்.பர்மாவில் பல்லாண்டுகளுக்கு குடியேறிய இவர்கள் இன்னமும் அகதியாக தான் வாழ்கின்றனர்.சுற்றுலா சொர்க்கமாகவுள்ள இந்நாடு, முஸ்லிம் சுற்றுலாவாசிகளை அனுமதிக்க மறுக்கிறது;மீறினால் அது கொலை சுற்றுலாவாகத்தான் முடியும்.
இக்கொலைகளை நிகழ்த்துவது எல்லாம் பர்மிய ராணுவமும், புத்த பிக்குகளுமே. இவர்கள் கூற்றுபடி பர்மா புத்த மதத்தவர்களுக்கானது,புத்தத்தை தழுவாதவர்கள் தீயவர்கள் ...கடவுள் இல்லை என்றால் அவர்கள் புத்த மதத்துக்கு எதிரானவர்கள்.இங்கு புத்த மதத்துக்கு அடுத்தப்படியாக மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது இந்து மதத்தவர்கள்.ஆனால் இந்து கோவில்களிலும் கூட ஒரு புத்த சிலை இருக்குமாம். அப்படியிருந்தால் தாக்க வரும் பர்மிய ராணுவமோ-புத்த பிக்குகளோ 'நம் மதத்தின் மீது பற்றோடு இருக்கிறார்கள்' என திரும்பி சென்றுவிடுவார்களாம்.
ஆனால் பர்மிய முஸ்லிம்களோ ஓர் பாவ பிறவிகளாக, அப்பாவிகளாக வதைப்படுகின்றனர்.இது போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து சில முஸ்லிம் போராளி குழுக்களும் உள்ளன.இவர்களை பார்த்த இடத்தில் கொல்லலாம் என்று அறிவிப்பும் உள்ளது.ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் எவரையும் ராணுவ ஜனநாயகம் அனுமதிப்பதில்லை.
பர்மாவில் 20 லட்சத்திற்கும் மேலாக உள்ள தமிழர்களுக்கும் சுயமான சுதந்திர வாழ்வில்லை-அவர்களும் புத்தத்துக்கு மாறிய பர்மியர்களாகவே வேடமிட்டு வாழ்கின்றனர்.
புத்தனை போதிக்கும் தேசங்கள் மனிதத்தை புதைத்து ரத்த வெறியோடு திரிகின்றன.இவர்களுக்கு புத்தரின் வாக்கு ஏற்றதாக இருக்கும் "ஆசையால் வெற்றி பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான்.ஆனால் தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக வாழ்ந்திடுவான்"!
சில புத்த தேசங்கள் சிந்திக்காமல் ஆசை போதையில் உள்ளன;இவர்கள் ஒரு நாள் அவர்களாகவே அழிவை தேடுவார்கள்..புத்தரின் வாக்கு போலவே !
நன்றி:மகா.தமிழ்ப் பிரபாகரன்
Vikatan