நியாயம் பேசுவதில் முதலிடம் நமக்குதான். யார் என்ன பேசலாம், எப்படி நடக்கலாம் என்று பாடம் எடுப்போம். எதெல்லாம் தப்பு என்று சுட்டிக் காட்டுவோம். ஆனால் பின்பற்ற மாட்டோம். உபதேசம் ஊருக்கு என்பது அப்படி வந்ததுதானே. விரல் ரேகை பதிவேடு பற்றி காந்தி பிறந்த நாளில் இந்த பகுதியில் வெளியான கருத்துக்கு கிடைத்த வரவேற்பும் எதிர்ப்பும் மேற்படி பழமொழியை நினைவுபடுத்துகிறது. மருத்துவமனைகளில் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை அமல்படுத்துவதை நர்ஸ்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். டாக்டர்களுக்கு மட்டும் இரண்டு சந்தேகங்கள்: மற்ற துறைகளின் பணியாளர்களை விட்டு விட்டு எங்களை குறி வைப்பது ஏன்? நேரத்துக்கு வந்துவிட்டால் பணி நேரம் முடிந்ததும் ஆபரேஷனைக்கூட அப்படியே விட்டுவிட்டு போகமுடியுமா? முதல் கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறது. எல்லா துறைகளிலும் கையெழுத்திடும் வருகை பதிவேடுக்கு பதில் மின்னணு தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டருடன் இணைந்த பயோ மெட்ரிக் அட்டெண்டன்ஸ் முறையை கொண்டுவர தமிழக அரசு முனைந்துள்ளது. மத்திய அரசின் பெரும்பாலான துறைகளிலும் பல மாநிலங்களிலும் முழுமையாக இந்த முறைக்கு மாறிவிட்டார்கள்.
தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு அடுத்ததாக பள்ளி, கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த இருக்கின்றனர். தாமத வருகை, மட்டம் போடுதல் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளை கணக்கெடுக்கும்போது மருத்துவம் முதலிலும் அதையடுத்து கல்வியும் வருகின்றன. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மறியல் என வகுப்புக்கு வெளியே திறமை காட்டும் போக்கு அதிகரித்து வருவதை அரசு உணர்ந்துள்ளதும் காரணம். டாக்டர்களின் இரண்டாவது கேள்வியில் நியாயம் இல்லை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை என்ற வரையறை அவர்களின் ஒப்பற்ற சேவையை கட்டுப்படுத்த நிர்ணயித்தது அல்ல. அப்படியே நினைத்தாலும், கூடுதல் நேர பணியை அடுத்தடுத்த நாட்களில் அல்லது வார இறுதியில் ஈடுகட்ட வழியிருக்கிறது. தவறுகள் குறையவும் மனிதவள நிர்வாகம் சீராகவும் தொழில்நுட்பம் உதவுகிறது. அதை வரவேற்காமல் நேரத்தை சாக்கிட்டு அவரவர் கடமையை அரைகுறையாக நிறுத்தினால் உலகம் ஸ்தம்பித்துவிடும்.
தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு அடுத்ததாக பள்ளி, கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த இருக்கின்றனர். தாமத வருகை, மட்டம் போடுதல் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளை கணக்கெடுக்கும்போது மருத்துவம் முதலிலும் அதையடுத்து கல்வியும் வருகின்றன. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மறியல் என வகுப்புக்கு வெளியே திறமை காட்டும் போக்கு அதிகரித்து வருவதை அரசு உணர்ந்துள்ளதும் காரணம். டாக்டர்களின் இரண்டாவது கேள்வியில் நியாயம் இல்லை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை என்ற வரையறை அவர்களின் ஒப்பற்ற சேவையை கட்டுப்படுத்த நிர்ணயித்தது அல்ல. அப்படியே நினைத்தாலும், கூடுதல் நேர பணியை அடுத்தடுத்த நாட்களில் அல்லது வார இறுதியில் ஈடுகட்ட வழியிருக்கிறது. தவறுகள் குறையவும் மனிதவள நிர்வாகம் சீராகவும் தொழில்நுட்பம் உதவுகிறது. அதை வரவேற்காமல் நேரத்தை சாக்கிட்டு அவரவர் கடமையை அரைகுறையாக நிறுத்தினால் உலகம் ஸ்தம்பித்துவிடும்.
No comments:
Post a Comment