தன்னை காப்பாற்றிக்கொள்ள அடுத்தவரை காட்டிக் கொடுப்பதும், அள்ளி அள்ளி கொடுத்திருந்தாலும் தனக்கு ஆபத்து என்றால் போட்டுத் தள்ளுவதும் உள்ளூர் அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியல்வரை சகஜமான விஷயம். லிபியாவின் அதிபராக, அசைக்க முடியாத தலைவராக இருந்த கடாபி, பாதாள சாக்கடையில் பதுங்கியிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுத்தள்ள உத்தரவிட்டது பிரான்ஸ் அதிபர் என்பதும் அவரை காட்டிக்கொடுத்தது சிரியா அதிபர் என்பதும் தெரிய வந்துள்ளது.உலகம் முழுவதும் இருக்கும் சர்வாதிகாரிகள், ரகசியமாக பல நாட்டுத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கில் டாலர்களை கொட்டுவார்கள். கோடிகள் கொட்டும் பிசினஸ் டீலிங்கை செய்து கொடுப்பார்கள். இதெல்லாம் ஆபத்து வரும்போது ஆதரவு குரல் கொடுக்கவும் தேவைப்படும்போது அடைக்கலம் கொடுப்பதற்கும்தான். அப்படித்தான் லிபியா அதிபர் கடாபி, பல நாட்டுத் தலைவர்களுக்கும் பண உதவி செய்திருக்கிறார். 2007ல் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோசி பிரசாரத்துக்கு பல கோடி டாலர்களை கடாபி வழங்கினார். இவருக்கு மட்டுமல்ல, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்க்கும் பல கோடி டாலர்கள் கிடைக்கும்படி வர்த்தக தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். எதெல்லாம் ஆபத்து காலத்தில் தனக்கு உதவியாக இருக்கும் என கடாபி நினைத்தாரோ அதுவே அவருக்கு எமனாகிவிட்டது. நேட்டோ படைகள், கடாபியை வேட்டையாடியபோது பிரான்சும் களம் இறங்கியது.
கடுப்பாகிப்போன கடாபி, தேர்தலுக்கு சர்கோசிக்கு தான் கொடுத்த டாலர்களை நினைவூட்டி எச்சரித்தார். அப்போதே கடாபி உயிரோடு பிடிபட்டால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த சர்கோசி, கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர் கூட்டத்தில் பிரான்ஸ் உளவாளியை சேர்த்தார். கடாபி யின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள சிரியா நாட்டு சர்வாதிகாரியான ஆசாத் உதவினார். கடாபியின் சேட்லைட் போன் நம்பரை கொடுத்தார். அதன்மூலம் கடாபியின் இருப்பிடம் தெரிந்து நேட்டோ விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதில் தப்பித்து பாதாள சாக்கடையில் பதுங்கியிருந்த கடாபியை பிரான்ஸ் உளவாளி கொன்றிருக்கிறார். சர்வாதிகாரிகள் கடைசியில் இப்படித்தான் சாகிறார்கள். மக்களை வஞ்சித்து ஏமாற்றும் அவர்களும் வஞ்சிக்கப்பட்டே இறக்கிறார்கள்.
கடுப்பாகிப்போன கடாபி, தேர்தலுக்கு சர்கோசிக்கு தான் கொடுத்த டாலர்களை நினைவூட்டி எச்சரித்தார். அப்போதே கடாபி உயிரோடு பிடிபட்டால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த சர்கோசி, கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர் கூட்டத்தில் பிரான்ஸ் உளவாளியை சேர்த்தார். கடாபி யின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள சிரியா நாட்டு சர்வாதிகாரியான ஆசாத் உதவினார். கடாபியின் சேட்லைட் போன் நம்பரை கொடுத்தார். அதன்மூலம் கடாபியின் இருப்பிடம் தெரிந்து நேட்டோ விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதில் தப்பித்து பாதாள சாக்கடையில் பதுங்கியிருந்த கடாபியை பிரான்ஸ் உளவாளி கொன்றிருக்கிறார். சர்வாதிகாரிகள் கடைசியில் இப்படித்தான் சாகிறார்கள். மக்களை வஞ்சித்து ஏமாற்றும் அவர்களும் வஞ்சிக்கப்பட்டே இறக்கிறார்கள்.
No comments:
Post a Comment